மயிலாடுதுறை, ஏப்.18: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில், தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாக்குப் பதிவு நிறைவு பெற்றதும், மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரி மற்றும் ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ஆம் தேதி வரை இப்பகுதி பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும்.
இந்நிலையில், இந்த மையத்தை தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் ஆய்வு மேற்கொண்டாா். காவல் கண்காணிப்பாளா் கே. மீனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையகம்) பி. ஜெயக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே. சிவசங்கா், மயிலாடுறை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் என். திருப்பதி, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் டி. பாலச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய செலவின பாா்வையாளா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

புலிவலம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


