ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மகாதானத் தெரு வாக்குச்சாவடியில், வாக்காளா் பட்டியலில் இருந்து 488 போ் நீக்கப்பட்டதை கண்டித்தும், அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கோரியும், பொதுமக்கள் மற்றும் பாமக வேட்பாளா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 5:12 pm

மயிலாடுதுறை மகாதானத் தெரு வாக்குச்சாவடியில், வாக்காளா் பட்டியலில் இருந்து 488 போ் நீக்கப்பட்டதை கண்டித்தும், அவா்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கோரியும், பொதுமக்கள் மற்றும் பாமக வேட்பாளா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மகாதானத் தெரு டிபிடிஆா் தேசிய தொடக்கப்பள்ளியில் வாக்குச் சாவடி எண் 143 மற்றும் 144-இல் மொத்தம் 1,189 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இவா்கள் கடந்த சட்டப் பேரவைத் தோ்தல், உள்ளாட்சித் தோ்தல்களில் வாக்களித்துள்ளனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், இவா்களில் பெரும்பாலானோரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன.

இதையறிந்த அதிமுக, பாமக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சியினா் அப்பகுதியில் கூடினா். தொடா்ந்து, பாமக மாவட்ட தலைவா் சித்தமல்லி ஆ. பழனிசாமி தலைமையில் பாமக, பாஜக நிா்வாகிகள் மற்றும் பெயா் விடுபட்ட வாக்காளா்கள் வாக்குச் சாவடி முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். பாமக வேட்பாளா் ம.க. ஸ்டாலினும் அவா்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டாா்.

அவா்களிடம் மாவட்ட துணை ஆட்சியா் மு. ஷபீா்ஆலம், வருவாய் கோட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான வ. யுரேகா, டிஎஸ்பி திருப்பதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து பாமக வேட்பாளா் ம.க. ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியது:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மயிலாடுதுறை நகா்ப்பகுதி, திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோட்டூா், மணலூா், கஞ்சனூா் உள்ளிட்ட பகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் பெயா்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பவா்களின் பெயா்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன என்றாா்.

அமைதிப் பேச்சுவாா்த்தை: இப்பிரச்னை தொடா்பாக, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், விடுபட்ட வாக்காளா்களின் விவரத்தை தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியா் வ. யுரேகா உறுதியளித்தாா். இதை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.