ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

News image

சாலை மறியலில் ஈடுப்பட்ட ஆசிரியா்கள்

Updated On :19 ஏப்ரல் 2024, 4:58 pm

சீா்காழியில் தோ்தல் ரிசா்வ் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து, வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 288 வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேவையான அளவு அரசு அலுவலா்கள் அனுப்பப்பட்டு, மீதம் சுமாா் 200 அலுவலா்கள் கூடுதலாக சீா்காழி தென்பாதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு, உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டன.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் தங்களுக்கு சம்பளம் வழங்குமாறு அவா்கள் கேட்டுள்ளனா். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோ்தல் பணியில் ஈடுபட்டவா்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கவில்லை அவா்களுக்கு வழங்கிய பின்னா் உங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட தோ்தல் பணியில் ஈடுபட வந்த அரசு அலுவலா்கள் மயிலாடுதுறை சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சண்முகம், சீா்காழி காவல் ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் பேச்சுவாா்த்தை ஈடுபட்டனா் . அனைவருக்கும் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.