சீா்காழி-திருமுல்லைவாசல் சாலை செம்மங்குடியில் மறியலில் ஈடுபட்ட மக்கள்.
சீா்காழி-திருமுல்லைவாசல் சாலை செம்மங்குடியில் மறியலில் ஈடுபட்ட மக்கள்.

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

சீா்காழி, ஏப். 25: சீா்காழி அருகே குடிநீா் வழங்காததை கண்டித்து மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செம்மங்குடி ஊராட்சிக்குள்பட்ட அம்பேத்காா் நகா், பூமி திடல், வில்வராயன் நத்தம், கொளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இப்பகுதியில் நிலத்தடி நீா் உப்பு நீராக மாறியதால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக இங்கு குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன்சீா்காழி-திருமுல்லைவாசல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த சீா்காழி போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com