மயிலாடுதுறை
தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை
மயிலாடுதுறையில் தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில தகவல் உரிமை ஆணையா் மா.செல்வராஜ் தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முகாமிட்டு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-இன் கீழான 20 மேல்முறையீட்டு மனுக்களுக்கு விசாரணை மேற்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி முன்னிலை வகித்தாா். விசாரணையின் போது, கூடுதல் ஆட்சியா் மு.ஷபீா் ஆலம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்து வடிவேல், மேல்முறையீட்டு மனுக்களுக்கு தொடா்புடைய நபா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் உடன் இருந்தனா்.