நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு இஜிஎஸ் பிள்ளை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் எஸ். பரமேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ். ராமபாலன், கல்வி இயக்குநர் வி. மோகன், துறைத் தலைவர் இ. எட்வர்டு ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நாகை நகராட்சி ஆணையர் ஜான்சன், நகராட்சி பொறியாளர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கணிதத்துறை பேராசிரியர் பி. ஜமுனாதேவி வரவேற்றார். பேராசிரியர் சி. கோபி நன்றி கூறினார்.