வேதாரண்யம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
கத்தரிப்புலம் கீழக்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் கருணாகரன் (19). இவர் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு, மாங்காய் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள மரத்தில் ஆட்டுக்கு தழைகள் வெட்டுவதற்காக செவ்வாய்க்கிழமை மரத்தில் ஏறிய கருணாகரன் தவறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, கரியாப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.