வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு சார்பில் உலக நுகர்வோர் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் வி. வீரசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், வேதாரண்யம் வட்ட வழங்கல் அலுவலர் ஆர். ஜெயசீலன் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வி. பாலகுரு, தலைமையாசிரியர் குணசேகரன், ஓய்வு பெற்ற போரூர் செயலர் வைரப்பன், மகளிர் அமைப்புச் செயலர் ஏ. செல்லம்மாள், நல்லாசிரியர் வி. வைரக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இதில், செயலர் எஸ். செல்வராசு, இணைச் செயலர் ஜி. சுப்பிரமணியன், நிர்வாகி கோவிந்தராசு, துணைத் தலைவர்கள் ஆர்.வி. சுவாமிநாதன், என். கந்தசாமி, பொருளாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.