தரங்கம்பாடி அருகேயுள்ள இலுப்பூர் சங்கரன்பந்தலில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் கடந்த 20 நாள்களாக அப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாள்தோறும் ரூ. 1,500 செலவு செய்து 300-க்கும் மேற்பட்டோருக்கு நீர்மோர் வழங்கி தாகத்தை தீர்த்து வருகின்றனர். கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து நீர் மோர் வழங்க உள்ளதாகவும், இப்பணியை ஆண்டுதோறும் தவறாமல் செய்வதாகவும் கூறுகின்றனர். இளைஞர்களின் சமூக அக்கறைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.