மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல் ஏவிசி தன்னாட்சிக் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 18) வெளியிடப்படவுள்ளதாக கல்லூரியின் முதல்வர் ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : 2018, ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பருவத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 18) பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்படவுள்ளன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள் கல்லூரி இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனவும், துணைப் பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.6.2018 கடைசி நாள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.