கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதியக்குழு பரிந்துரைக்காக அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி, மன்னார்குடி உபகோட்டத்துக்கு உள்பட்ட அஞ்சல் ஊழியர் சங்கத்தினர், 5-ஆவது நாளாக சனிக்கிழமை பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி மேலராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சல் ஊழியர்கள் சங்கத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.