தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கைது செய்யப்பட்டதற்கு இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களைப் பார்த்து ஆறுதல் கூற அனைத்துக் கட்சித் தலைவர்களும் அனுமதிக்கப்படும் நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகனுக்கு அனுமதி மறுத்து, விமான நிலையத்திலேயே அவரை கைது செய்திருப்பது தமிழக அரசின் தவறான அடக்குமுறை. அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு உடனடியாக வேல்முருகனை விடுவித்து, தூத்துக்குடியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூற அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.