நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து மாதா ஆலய ஆண்டு விழாவையொட்டி, திருத்தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தாணிக்கோட்டகம் லூர்து மாதா ஆலய ஆண்டு விழா மே 18 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு நிகழ்ச்சியாக தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 5 சப்பரங்களை பெண்களும், ஆண்களும் தூக்கிச் சென்றனர்.
தஞ்சை மறைமாவட்ட இளங்குரு மடத்தின் அதிபர் அகஸ்டின், பங்குத் தந்தைகள் ஆரோக்கியநாதன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.