டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

பொறையாறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொறையாறு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தை தரங்கம்பாடி வட்டாட்சியர் அ. சுந்தரம் தொடங்கி வைத்தார். தரங்கம்பாடி பேரூராட்சி பகுதிக்குள்பட்ட கேசவன்பாளையம், காத்தான்சாவடி, பொறையாறு, சோனவன்தோட்டம், ஒழுகைமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் மற்றும் சுகாதார துறையை சேர்ந்த அலுவலர்கள் வீடுகளில் சுகாதாரம் குறித்தும், டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com