குத்தாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை டேங்கர் லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார்.
குத்தாலம் அருகேயுள்ள கோமல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் குத்தாலம் நோக்கி தேரழந்தூர் அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தபோது, ஓஎன்ஜிசி டேங்கர் லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த, புகாரின்பேரில் குத்தாலம் போலீஸார் வழக்குப் பதிந்து டேங்கர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.