பணிக் காலத்தின்போது உயிர்நீத்த 2 காவலர்களின் குடும்பத்துக்கு, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினார்.
நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ராமகிருஷ்ணன், ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய குணசேகரன் ஆகியோர் பணிக் காலத்தின்போது உயிர் நீத்தனர்.
இதையொட்டி, அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் வழங்கினார்.