ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தி கொல்லப்பட்ட சிறுமி ஆஷிபாவின் மரணத்துக்கு நீதி கோரி தமுமுக சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
சிறுமி ஆஷிபாவை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தி கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சிறுமியின் மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமுமுக மாவட்டத் தலைவர் ஏ.எம். ஜபருல்லா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். நிஜாமுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ரபீக், தமுமுக பொருளாளர் இஸ்மாயில், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஓ.எஸ். இப்ராஹிம், நகரச் செயலாளர் சாதிக், மமக நகரச் செயலாளர் பைசல் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்று, கண்டனத்தை வெளிப்படுத்தியும், கோரிக்கையை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.