திருக்கடையூர் அருகே மஞ்சலாற்றின் குறுக்கே கதவணை கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு நிலவள மற்றும் நீர்வளத் திட்டத்தின்கீழ், உலக வங்கி நிதி உதவியுடன் ரூ. 5. 45 கோடி மதிப்பில் மஞ்சலாற்றின் குறுக்கே கதவணை மற்றும் மதகு அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் பங்கேற்று பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழச்சியில் உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் வீரப்பன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.