திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை சுகாதாரப் பணிகள் நடைபெற்றன.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் மற்றும் ஆயுள் ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் கோயில் வளாக பகுதியில் குப்பைகள் மற்றும் தேங்கிய மழைநீரினால் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில் கோயில் வளாக பகுதியில் சுகாதாரப் பணிகள் கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.