தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.
கிளியனூர், திருக்கடையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் தரங்கம்பாடி வட்டாட்சியர் சுந்தரம் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார். இம்முகாம்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான படிவங்களை பூர்த்தி செய்து, ஏராளமானோர் வழங்கினர். இதில் திருக்கடையூர் கிராம நிர்வாக அலுவலர் கவிநிலவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.