தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் ஆய்வு

செம்பனார்கோவிலில் தேர்தல் அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் சனிக்கிழமை ஆ


செம்பனார்கோவிலில் தேர்தல் அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
 மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பூம்புகார் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு இறுதிகட்டப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை நடைபெற்றன. செம்பனார்கோவில் கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற இந்த பயிற்சியில், 20 குழுவினர் கலந்துகொண்டனர்.  பயிற்சி வகுப்புகளை நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் ஆய்வுசெய்து, தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, தரங்கம்பாடி வட்டாட்சியர் சுந்தரம், உதவி செய்தி மக்கள்தொடர்பு துணை அலுவலர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com