மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (35). இவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த கோடீஸ்வரிக்கும் (30) திருமணமாகி, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ராஜபாண்டின் கோடீஸ்வரியை அடித்தாராம். இதில், கோடீஸ்வரி உயிரிழந்தார்.
தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸார், கோடீஸ்வரியின் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜபாண்டியனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.