மனைவியை அடித்து கொன்றதாக கணவர் கைது

மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.


மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (35). இவருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த கோடீஸ்வரிக்கும் (30) திருமணமாகி, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ராஜபாண்டின் கோடீஸ்வரியை அடித்தாராம். இதில், கோடீஸ்வரி உயிரிழந்தார். 
தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸார், கோடீஸ்வரியின் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜபாண்டியனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com