சீர்காழியில் வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு சனிக்கிழமை புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சீர்காழியில் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தேர்தல் அலுவலர்களாக மூத்த வழக்குரைஞர்கள் வீரமணி, தியாகராஜன் ஆகியோர் செயல்பட்டனர். இதில், புதிய தலைவராக மூத்த வழக்குரைஞர் ராஜாராமன், செயலராக மணிவண்ணன், இணைச் செயலராக சுதா, பொருளாராக தியாகராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.