மயிலாடுதுறை அருகேயுள்ள ஏவிசி கல்லூரியில் அண்மையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஏவிசி கல்வி நிறுவனங்களின் செயலர் கே. கார்த்திகேயன் தொடங்கி வைத்து பேசினார். இதில், தஞ்சாவூர் போக்குவரத்து ஆணைய உதவி ஆணையர் எஸ். உதயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். அழகிரிசாமி, மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் பி. சண்முகம், பொறியியல் கல்லூரி துணை முதல்வர் செல்வமுத்துக்குமரன், இயக்குநர் (நிர்வாகம்) செந்தில்முருகன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுபாஷ், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.