வேதாரண்யம் அருகே குளத்தில் மூழ்கி பெண் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கத்தரிப்புலம் பனையடிக்குத்தகை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மனைவி மகாராணி (38). இவர் அப்பகுதியில் உள்ள மன்மதன்கோயில் குளத்துக்கு குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக அன்பழகன் அளித்த புகாரின்பேரில், கரியாப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.