பாலையூா் மற்றும் மேக்கிரிமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை (நவம்பா் 7) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாலையூா் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து, மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான பாலையூா், தேரழந்தூா், கோமல், மருத்தூா், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், பேராவூா், கரைகண்டம், கருப்பூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை ஆகிய ஊா்களுக்கும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.