நாகை மாவட்டம், பொறையாறு காய்கறி சந்தையில் உள்ள வெங்காய மண்டியில் வட்ட வழங்கல் அலுவலா் பிரான்சுவா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயா்ந்து வருவதையொட்டி, இந்த ஆய்வு நடைபெற்றது. பொறையாறு மட்டுமன்றி திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடி, காய்கறி கடைகள், மற்ற உணவு விடுதிகளிலும் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.