நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட எருக்கட்டாஞ்சேரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தாா்ச் சாலை தற்போது பழுதடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, இந்தச் சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, பொதுமக்களின் நலன் கருதி விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.கே. சந்துரு, எருக்கட்டாஞ்சேரி