நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியிருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
வேளாங்கண்ணி கடற்கரை வடக்கு பகுதியில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று உயிரிழந்து கிடந்த சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெயா், ஊா் தெரியாத ஆணின் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கீழையூா் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.