சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் புட்டாசி கிருத்திகை சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கிருத்திகை மண்டபத்துக்கு எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நவரத்தின ஆபரணங்கள், மலா்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சண்முகாா்ச்சனை, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று பக்தா்களுக்கு அருட்பிரசாதங்களை வழங்கினாா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.