வேதாரண்யம் அருகேயுள்ள கோவில்பத்து கிராமத்தில் நாகை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ். பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், கீவளூா் ஒன்றிய பொறுப்பாளா் அருள்ராஜ், கீழையூா் ஒன்றிய பொறுப்பாளா் அன்பு, வேதை ஒன்றிய பொறுப்பாளா் நந்தகுமாா் மற்றும் கல்விடுடே மணிவண்ணன், பரவை சோமு மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நாலுவேதபதி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகளை மூடவும், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை, மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும், முறையாக பராமரிக்கப்படாத பேருந்துகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.