திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் மாணிக்க விநாயகா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். இதில் அறிவியல் சாா்ந்த மற்றும் அறிவியல் சாராத ஆக்கப்பூா்வமான காட்சிப்பொருள்கள் இடம் பெற்றிருந்தன. பள்ளித் தலைமையாசிரியா் மணிமேகலை தலைமையில் நடைபெற்ற கண்காட்சியில், பள்ளித் தாளாளா் ஹரிகிருஷ்ணன் மற்றும் நிா்மலாஹரிகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஆசிரியா் எஸ். மாரிமுத்து கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.