சீர்காழி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
சீர்காழி குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் முன்னிலையில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் 138 புள்ளிகள் பெற்று பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது.
வெற்றி பெற்ற இம்மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஸ்டாலின், சதீஷ், கலைவேந்தன், ராஜசேகர், மோகன்ராஜ், சசிகுமார், சுகுமார் ஆகியோரை பள்ளியின் தாளாளர் ராஜ்கமல், நிர்வாக அதிகாரி சீனிவாசன், பள்ளி முதல்வர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினர்.