ஆடிப்பூரத்தையொட்டி, சீர்காழி தாடாளன்பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆடிப்பூரத்தையொட்டி, ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாரானை ஆகியன நடைபெற்றன. இதேபோல் தாடாளன்பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை
செய்விக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள்-ஆண்டாள் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.