மாநில கூடைப்பந்து போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கான நாகை மாவட்ட மாணவ, மாணவிகள் தேர்வு மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கான நாகை மாவட்ட மாணவ, மாணவிகள் தேர்வு மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
13 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை விருதுநகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் நாகை மாவட்ட அணித் தேர்வு, மயிலாடுதுறை சாய் விளையாட்டு கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. 
இதில், சாய் கூடைப்பந்து பயிற்றுநர் மணிவாசகம், தமிழ்நாடு கூடைப்பந்து பயிற்றுநர்கள் வடிவேல், முருகன், ரவி, மார்கண்டேயன் ஆகியோர் தகுதியுடைய மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்தனர். சாய் முதல்வர் தனலட்சுமி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கே.பத்மநாபன், விவேகானந்தா இயக்குநர் பிரவீன்,  உடற்கல்வி ஆசிரியர்கள் சுந்தர், குழந்தைவேல், கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர். நாகை மாவட்ட கூடைப்பந்துக் கழகத் தலைவர் எல்.சுரேன் மற்றும் செயலாளர் வை.பாரதிதாசன் ஆகியோர் ஏற்பாடு 
செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com