குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்

திருக்குவளை அருகே உள்ள கச்சனத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை அருகே உள்ள கச்சனத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் ஆர்.பி.எஸ்.கே. திட்டத்தின்கீழ், பள்ளி குழந்தைகளுக்கு டி.பி.டி. மற்றும் டி.டி. தடுப்பு ஊசிகள் போடப்பட்டன. 1,5 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.
ஆலத்தம்பாடி சுகாதார மைய மருத்துவ அலுவலர் சங்கீதா மற்றும் செவிலியர்கள் குழுவாக வந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆலோசகர் மற்றும் முதல்வர் கே. பொது செல்வன் செய்திருந்தார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com