மக்கள் குறைதீர் முகாம்

ஆக்கூரில் தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆக்கூரில் தமிழக அரசின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 வருவாய்துறை  ஆய்வாளர் பத்மா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், பெண்களுக்கான தையல் இயந்திரம், முதியோர் ஓய்வூதியம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. 
இம்முகாமில், ஆக்கூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள் மணிவண்ணன், புஷ்பா, கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com