நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்களின் வலை, மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த த. பொன்னுசாமி (40), மணியன் தீவு பகுதியைச் சேர்ந்த ச. முத்துகிருஷ்ணன் (52) ஆகியோர் தனித்தனி படகுளில் மீன்பிடிக்க திங்கள்கிழமை கடலுக்குச்
சென்றனர்.
இருவரது படகுகளிலும் தலா நான்கு பேர் இருந்த நிலையில், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம்.
அப்போது அங்கு படகுகளில் வந்த மர்ம நபர்கள், இவர்கள் விரித்து வைத்திருந்த 700 கிலோ எடையுள்ள வலைகளைத் துண்டித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மீன்வளத்துறையினர், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.