சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (ஆக.24) நீர்வள மேலாண்மை குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது என சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீர்வளஆதாரம் மேம்பாடு குறித்தும், பொது மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. 37 ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று நீர்வளஆதாரத்தை பெருக்குவது குறித்து தங்களது கருத்துகளை பதிவு செய்யவும், அரசு அலுவலர்களால் அறிவுறுத்தப்படும் ஆலோசனைகளை பெறவும் தவறாமல் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.