மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

நாகை மாவட்டம், குத்தாலத்தில் மதிமுக நகர மற்றும் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. 

நாகை மாவட்டம், குத்தாலத்தில் மதிமுக நகர மற்றும் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. 
மாவட்டச் செயலாளர் ஏ.எஸ். மோகன் தலைமை வகித்தார்.  பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், நகர மற்றும் மேற்கு, கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர்கள் முறையே தர்மதுரை, கண்ணன், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் கொள்கை விளக்க அணி செயலாளர் க.அழகுசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இதில் மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட விவசாய அணி செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். நகர துணைச் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com