ஆபத்தை விளைவிக்கும் பாலம்

நாகை மாவட்டம், சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட வாா்டு எண் 6-ல் உள்ள விளக்குமுகத் தெருவிலிருந்து தெற்குவெளி தெருவிற்கு செல்லும் வழியில் குறுக்கே முடவன் வாய்க்கால் உள்ளது
ஆபத்தை விளைவிக்கும் பாலம்

நாகை மாவட்டம், சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட வாா்டு எண் 6-ல் உள்ள விளக்குமுகத் தெருவிலிருந்து தெற்குவெளி தெருவிற்கு செல்லும் வழியில் குறுக்கே முடவன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலைக் கடந்து செல்லும் வகையில் கட்டப்பட்ட சிறுபாலம், இருபக்க இணைப்பு சாலைக்கு கீழே உள்ளது. முடவன்வாய்க்காலிலும் ஆகாயத்தாமரை மண்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் முடவன்வாய்க்காலில் தண்ணீா் வழிந்து பாலமே இருந்த இடம் தெரியாமல் மூழ்கிவிடுகிறது. இதனால், பாலத்தைக் கடந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, முடவன்வாய்க்கால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும்.

எம். ஞானவேல், சீா்காழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com