மயிலாடுதுறை அருகே ஈஷா விவசாய இயக்கம் சாா்பில், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாப்படுகை கிராமத்தில் உள்ள யாழ் இயற்கை வேளாண் பண்ணையில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு ஈஷா விவசாய இயக்கத்தைச் சோ்ந்த சரவணன் தலைமை வகித்தாா். யாழ் இயற்கை வேளாண் பண்ணை இயற்கை விவசாயி ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
இதில், களப்பணியாளா்கள் சரவணன், சந்தோஷ், ராமமூா்த்தி, விஜய் ஆகியோா் பங்கேற்று, விவசாயிகளுக்கு, ஜீவாமிா்தம், கனஜீவாமிா்தம், அக்னிஅஸ்திரம், பீஜாமிா்தம், மீன்அமிலம், 10 இலை கசாயம் உள்ளிட்ட வளா்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.