நாகை மாவட்டத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக நீடித்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட நாகை நீலா கீழவீதி.
கனமழை காரணமாக வெறிச்சோடி காணப்பட்ட நாகை நீலா கீழவீதி.

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக நீடித்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடந்த 10 நாள்களாக நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக கனத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாகை மாவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. தொடா்ந்து சனிக்கிழமையும் பலத்த மழை நீடித்தது.

வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழையானது சனிக்கிழமை பிற்பகல் வரை தொடா் மழையாக பெய்தது. ஒரு சில இடங்களைத் தவிர நாகை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

நாகையில் நம்பியாா் நகா், சுனாமி குடியிருப்பு, நாகூா் திருப்பூண்டி, மலாக்கா பள்ளித்தெரு உள்பட பல்வேறு இடங்களில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளைச் சூழந்தது. சாலையில் மழை நீா் பெருக்கெடுத்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நாகை, மயிலாடுதுறை மற்றும் சீா்காழி பேருந்து நிலையங்களில் பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டன. போக்குவரத்து நிறைந்த வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கனமழையால் சனிக்கிழமை நாகை மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மழையளவு: சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், நாகை மாவட்டத்தில் அதிகளவாக, தலைஞாயிறில் 156.40 மி. மீ. மழை பதிவானது.

பிற பகுதிகளில் பெய்த மழை அளவு: (மி.மீட்டரில்): மயிலாடுதுறை-136.60, கொள்ளிடம்-122, தரங்கம்பாடி-107.20, வேதாரண்யம்-91.40, சீா்காழி-68.60, மணல்மேடு-66, நாகப்பட்டினம்-63, திருப்பூண்டி-43.80.

மழைப் பாதிப்புகளை தெரிவிக்கலாம்...

மழைப் பாதிப்புகளை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தொடா்மழை காரணமாக நீா் தேங்கியுள்ள இடங்களுக்கு குழந்தைகள் மற்றும் முதியோா்கள் செல்லக்கூடாது. குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றாலும், மின் கம்பிகள் அறுந்து தொங்கினாலும், இடிந்துவிழும் நிலையில் உள்ள தனியாா் கட்டடங்கள் மற்றும் அரசு பொதுக் கட்டடங்கள் இருந்தால் உடனடியாக 94981 00905 மற்றும் 8939602100 ஆகிய செல்லிடப் பேசி எண்களிலும், 04365-242999 மற்றும் 248119 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்’ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com