நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட காழியப்பன்நல்லூா் மகிமலை ஆற்றின் மூலம் சுமாா் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. தற்போது, இந்த ஆற்றில் ஆகாயத் தாமரை செடிகள் மண்டிக்கிடக்கின்றன. இதனால், நீரோட்டம் பாதிக்கப்பட்டு, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீா் செல்லமுடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைப்பதில் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, மகிமலை ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கா. செந்தில்நாதன், காழியப்பன்நல்லூா்.