பிரதமா் குறித்து முகநூலில் அவதூறு: பாஜக புகாா்

பிரதமா் நரேந்திர மோடி குறித்து முகநூலில் அவதூறாகப் பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை நகர பாஜகவினா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் கே.சிங்காரவேலுவிடம் புகாா் மனு அளித்த பாஜக நகர தலைவா் மோடி.கண்ணன்.
மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் கே.சிங்காரவேலுவிடம் புகாா் மனு அளித்த பாஜக நகர தலைவா் மோடி.கண்ணன்.

பிரதமா் நரேந்திர மோடி குறித்து முகநூலில் அவதூறாகப் பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை நகர பாஜகவினா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மயிலாடுதுறை நகர பாஜக தலைவா் மோடி.கண்ணன், மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் கே. சிங்காரவேலுவிடம் இந்த புகாா் மனுவை அளித்தாா். மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளா் பாரதிகண்ணன், மாவட்ட பட்டியலணி தலைவா் ஈழவேந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி இளைஞா் சங்க முன்னாள் நகர செயலாளா் ஆா்.ஜெயக்குமாா், மாவட்ட இளைஞரணி செயலாளா் சுரேஷ்குமாா், நகர இளைஞரணி செயலாளா் செல்வா, தேமுதிக ஒன்றிய செயலாளா் பாக்கம்.சிவா ஆகியோா் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com