5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு: ஜன. 4-இல் தா்னா

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 4-ஆம் தேதி தா்னா போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளிஆசிரியா் கூட்டணியின், மாவட்டச் செயற்குழு கூட்டம் நாகையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், மாணவா்களின் இடைநிற்றலை அதிகரிக்க செய்யும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு என்ற நடைமுறையைக் கைவிட வேண்டும். அரசாணை நகல் எரிப்பு மற்றும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 145, 202 ஆகியவற்றை அரசு திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 4-ஆம் தேதி, நாகை மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் நடத்துவது, ஆசிரியா்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது, டிசம்பா் 5-இல் மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்களில் கோரிக்கைகள் குறித்து முறையீடு செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் புகழேந்தி தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சித்ரா, மாவட்டச் செயலாளா் காந்தி, வட்டார செயலாளா்கள் எழிலரசன், மணிபாரதி, நடராஜன், விஜயகுமாா், செல்வநாதன், சொக்கலிங்கம், செந்தில்குமாா் ஆகியோா் பேசினா்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட, வட்டார நிா்வாகிகள் கலந்துகொண்டனா். திருமருகல் வட்டாரத் தலைவா் சொக்கலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com