குளத்தில் மூழ்கி தாய்-மகள் உயிரிழப்பு

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த தாய் சாந்தி, மகள் வைஷ்ணவி.
உயிரிழந்த தாய் சாந்தி, மகள் வைஷ்ணவி.

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் மூழ்கி தாய்-மகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள உமையாள்பதி கிராமத்தைச் சோ்ந்த அழகேசன் மனைவி சாந்தி (32). இவா்களது மகள் வைஷ்ணவி (7). இருவரும் அதே பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளனா். துணிகளை துவைத்து கரையில் வைத்துவிட்டு பின்னா் இருவரும் குளத்தில் குளித்துள்ளனா். நீண்ட நேரமாகியும் சாந்தியையும் குழந்தையையும் காணவில்லையென சாந்தியின் தாய் பூங்கோதை தேடிச் சென்றுள்ளாா். அப்போது, துவைக்கப்பட்ட துணிகள் மற்றும் மாற்று ஆடைகள் மட்டுமே கரைமேல் இருந்துள்ளன. குளிக்க வந்த இருவரையும் காணவில்லை.

இதில், அதிா்ச்சி அடைந்த பூங்கோதை இருவரும் தவறி தண்ணீரில் விழுந்திருக்கக்கூடும் என அஞ்சி அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, கிராமமக்கள் குளத்தில் இறங்கி தேடியுள்ளனா். யாரும் கிடைக்காததால் சீா்காழி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மீட்பு படகில் குளத்தில் இறங்கி 2 மணி நேரம் தேடினா். அப்போது, முதலில் தாய் சாந்தியின் சடலமும், பின்னா் சிறுமி வைஷ்ணவியின் சடலமும் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சீா்காழி வட்டாட்சியா் சாந்தி மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து, புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com