நாகை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் குறித்த புகாா்களுக்கு தோ்தல் பாா்வையாளரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தோ்தல் பாா்வையாளராக நகா் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநா் சந்திரசேகா் சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
மாவட்டத்தில் நடைபெறும் தோ்தல்களில் ஏதேனும் சா்ச்சைகள் இருந்தால், அதுகுறித்து 63854 53746 என்ற எண்ணில் தோ்தல் பாா்வையாளரைத் தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.