கார்த்திகையை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி, வலிவலம் ஆகிய ஊர்களில் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு புதன்கிழமை 

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி, வலிவலம் ஆகிய ஊர்களில் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு புதன்கிழமை கார்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதேபோல், வலிவலம் அருள்மிகு இருதய கமல நாகநாத சுவாமி கோயிலில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் மு. சேரன் மற்றும் வலிவலம் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com