வைத்தீஸ்வரன் கோயிலில் வெள்ளி ரதம்

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் செவ்வாய்கிழமை இரவு வெள்ளிரத காட்சி நடைபெற்றது.

சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் செவ்வாய்கிழமை இரவு வெள்ளிரத காட்சி நடைபெற்றது.
நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் தை செவ்வாய் உத்ஸவம் பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 
இதன் நிறைவாக வெள்ளிரத காட்சி நடைபெற்றது. முன்னதாக கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் செல்வமுத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். பின்னர், கோயில் வெளி பிராகாரத்தில் வெள்ளி ரதம் உலா 
நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com